இன்று ஒரு தகவல் 9 - "சாக்ரடீஸ் !!!

0 Comments »
இன்று அறிவியல் ஞானத்தால் வளர்ச்சி அடைந்து கம்பீரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கும் . இந்த ஒளிமயமான உலகம் ஒரு காலத்தில் அனைத்தும் இருந்தும் அறியாமை என்னும் இருட்டுக்குள் மூழ்கிக்கிடந்தது .2450 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கில்,  >>>>

 
 
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

இன்று ஒரு தகவல் 8 - ஹிட்லர் !!!

, 0 Comments »
கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு, ஹிட்லர் அதிகாரத்திலிருந்த ஆண்டுகளில் வரலாறு கண்டிராத கொடிய இனப்படுகொலைக் கொள்கையைக் கையாண்டார். அவர் கொடூரமான >>>>


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

முகவரி தொலைந்து என் தாய் மண் ( ஈழம் ) !!!

0 Comments »
நண்பர்களே இதற்கான பதிவை வாசிக்க இங்கு சொடக்கவும் . >>>>






இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ....

பேருந்துக் காதல்..! - (தொடர் பதிவு) !!!

0 Comments »
பேருந்துகள் எத்தனையோ கதைகளையும், சுமைகளையும், தினம் தினம் அரங்கேற்றும் ஒரு நாடகப்பட்டறை. எத்தனை எத்தனையோ நிழல்கள் நிஜங்களாகவும், நிஜங்கள் நிழல்களாகவும் மாறும் ஓவியக்கூடம்...!பலதரப்பட்ட மனிதர்களை சுமந்து சென்றாலும் >>>>
 
 
 
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!!

, , , 0 Comments »
லகம் இப்ப எங்கோ போய்க்கொண்டு இருக்கிறது . மக்களை நிகழ்காலத்தில் நிலத்தில் நிரந்தரமாக குடியேற்றி அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தெரியாத இந்த நாடுகள் எதிர்காலத்திற்கு என்று சொல்லி நிலவில் வாழ >>>>






இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் .


இன்று ஒரு தகவல் - டைனோசர் இனம் அழிவு !!!

0 Comments »
பூமியின் மீது ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன், விண்கல் மோதியதால் ஏற்பட்ட பேரழிவின் காரணமாக, டைனோசர் இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். >>>>>

 
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

பெண்களின் 14 ஆண்டு கால 33 சதவீத இடஒதுக்கீடு கனவு நனவாகியுள்ளது !!!

, 2 Comments »
பெண்களின் 14 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது.லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா நேற்று ராஜ்யசபாவில் அமோக ஆதரவுடன் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 186 எம்.பி.,க்களும், எதிர்ப்பாக ஒரே ஒரு எம்.பி.,யும் ஓட்டளித்தனர். மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். மசோதா நிறைவேறியதன் மூலம், 14 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது.


லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்தது. இதையடுத்து, பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தயார் செய்யப் பட்டு, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மசோதாவில், இதர பிற்பட்ட மற்றும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கும் உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, முலாயம்சிங்கின் சமாஜ்வாடி, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் வலியுறுத்தின.அதனால், ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழுவும், மசோதாவை தற்போதைய நிலையிலேயே நிறைவேற்ற ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து, மசோதாவை மீண்டும் பார்லிமென்டில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இந்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினமும், நேற்றும் சமாஜ் வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் உட்பட சில கட்சிகளின் எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால், ஏழு எம்.பி.,க்கள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதன்பின் மசோதாவின் மீது விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பேசினர். இறுதியாக, மசோதா ஓட்டெடுப்பிற்கு விடப்பட்டது. ராஜ்யசபாவில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. இவர்களில் 233 பேர் நேற்று சபைக்கு வந்திருந்தனர். இவர்களில் 155 பேரின் ஆதரவு தேவை. ஆனால், 186 எம்.பி.,க்கள் மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். ஒரே ஒரு எம்.பி., மட்டும் மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்தார். இதன்மூலம் மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான்மை உறுப்பினர்களின் அமோக ஆதரவுடன், பெண்கள் மசோதா நிறைவேறியதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டது.
மசோதாவுக்கு ஆதரவாக காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் ஓட்டளித்தன.வரலாற்று சிறப்புமிக்க இந்த அரசியல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் புதிய அரசியல் சகாப்தம் துவங்கியுள்ளது.ராஜ்யசபாவில் நிறைவேறியுள்ள இந்த மசோதா, இனி லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். லோக்சபாவிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநடப்பு: பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மீது, ராஜ்யசபாவில் நேற்று நடந்த ஓட்டெடுப்பின் போது, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பங்கேற்றுள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. அதேபோல், மசோதாவை தற்போதைய நிலையில் நிறைவேற்றக் கூடாது என, எதிர்ப்பு தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் 15 பேரும், ஓட்டெடுப்பிற்கு முன்னதாக சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.மசோதாவை தற்போதைய நிலையில் நிறைவேற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தாலும், அந்தக் கட்சியைச் சேர்ந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்ததால், அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் ஏழு பேரும் மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். அதேபோல், அ.தி.மு.க., தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவு அளித்தன

.பார்லிமென்டின் இரு சபைகளிலும் இந்த மசோதா நிறைவேறி விட்டால், லோக்சபாவில் மொத்தமுள்ள தேர்ந்தெடுக்கப்படும் 543 எம்.பி.,க்களில், 181 பேர் பெண்களாக இருப்பர். அதேபோல், 28 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளில் மொத்தமுள்ள 4,109 எம்.எல்.ஏ.,க்களில் 1,370 பேர் பெண்களாக இருப்பர். ஒருவகையில் ஆண்கள் பிரதிநிதித்துவம் குறையும். ஆனால், மொத்த எண்ணிக்கையில் பாதி பேர் பெண்கள் என்பதை பலரும் மறந்தனர். ஆப்கன், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள பிரதிநிதித்துவ சதவீதம் இங்கே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மசோதா மீது விவாதம் நடந்த போது குறுக்கிட்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "இந்தச் சட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மேற்கொண்ட மிகப்பெரிய நடவடிக்கை. இது சிறுபான்மையினருக்கோ அல்லது தாழ்த்தப் பட்டோர் அல்லது மலைவாழ் பழங்குடியினருக்கோ எதிரானது அல்ல' என்றார்.

பெண்கள் மசோதா: அன்று முதல் இன்று வரை... :

1974: நாட்டில் பெண்களின் நிலை தொடர்பாக ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட கமிட்டி, மத்திய கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், பார்லிமென்டில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.

1993: பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி அமைப்புகளில், பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்க வகை செய்யும் 73 மற்றும் 74வது அரசியல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

1996 (செப்டம்பர் 12): தேவகவுடா தலைமையிலான அரசு பதவியில் இருந்த போது, 81வது அரசியல் சட்டத் திருத்தமாக பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், கவுடா அரசு சிறுபான்மை அரசாகி விட்டதால், 11வது லோக்சபா கலைக்கப்பட்டது.

1998 (ஜூன் 26): 12வது லோக்சபாவில், 84வது அரசியல் சட்டத் திருத்த மசோதாவாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இந்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த முறையும், வாஜ்பாய் அரசு சிறுபான்மை அரசாகி, லோக்சபா கலைக்கப்பட்டதால், மசோதா நிறைவேறாமல் போனது.

1999 (நவம்பர் 22): 13வது லோக்சபாவில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசால், இந்த மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை என்பதால், மசோதா நிறைவேற்றப்படவில்லை. 2002 மற்றும் 2003ல் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டாலும், நிறைவேற்ற முடியவில்லை.

2008 (மே 6) : ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால், ராஜ்யசபாவில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டு, சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
டிசம்பர் 17): நிலைக்குழு தன் அறிக்கையை சமர்ப்பித்தது. பார்லிமென்டின் இரு சபைகளிலும் மசோதாவை தாக்கல் செய்யலாம் என, தெரிவித்தது.

2010 (பிப்ரவரி 22): பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.

2010 (பிப்ரவரி 25): பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2010 (மார்ச் 8): ராஜ்யசபாவில் மீண்டும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வரலாறு காணாத அளவிலான ரகளை அரங்கேறியது.

2010 (மார்ச் 9): பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, ராஜ்யசபாவில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.,க்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

THANKS DINAMALAR

மறக்காத மகளிர் தினமும் மறுக்கப்படும் மகளிர் உரிமைகளும் !!!

0 Comments »
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கானகங்களில் சுற்றிக்கொண்டிருந்த குரங்கினங்களில் ஒன்று மனித இனமாகப் பரிணமித்த போது தோன்றிய முதல் மனித உயிர் ஆணல்ல, அது ஒரு பெண். ஆம்! அவள் தான் நமது மூதாய் என்று அறிவியல் உறுதியாகச் சொல்கிறது. நாகரிகம் தோன்றாத அந்தக் காலத்தில் வேட்டையாடிக் கொண்டு குகைகளில் மனித இனம் >>>>

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

மறக்காத மகளிர் தினமும் மறுக்கப்படும் மகளிர் உரிமைகளும் !!!

0 Comments »

அனைவரும் அறிந்தது என்றாலும் இதை மீண்டும் மீண்டும் ஞாபகப் படுத்துவது என் கடமையாக நினைக்கிறேன் . ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் மகளிர் தினம் மட்டுமே கொண்டாடப்படுகிறது .ஆனால் மகளிர் உரிமைகள் மட்டும் மறக்காமல் மறுக்கப்படுகின்றன .

உலக அரங்கில் பெண்கள் செய்யும் ஒவ்வொரு சாதனைகளையும் அதனால் அடையும் நன்மைகளையும் மட்டும் எண்ணத்தில் கொண்டு தலை நிமிர்ந்து .>>>>
 
 
 
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ....

திடீர் திருப்பம் நித்தியானந்தர் வீடியோ மூலம் விளக்கம் வெளியீடு !!!

2 Comments »
உண்மை இல்லை என மறுக்கிறார் நித்தியானந்தர் ; ஆதரவு கதவும் திறக்கிறதாம்; வீடியோ மூலம் விளக்கம் வெளியீடு

பெங்களூரு: தம் மீது வேண்டும் என்றே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நான் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. தவறான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆணித்தரமான ஆதாரங்களை திரட்டி வருகிறேன் என்றும் இதனை நான் மக்கள் முன் திறந்து வைக்கிறேன் என்றும் செக்ஸ் புகாரில் சிக்கிய நித்தியானந்தர் வீடியோ மூலம் செய்தி அனுப்பியுள்ளார். இவ்வளவு அவதூறு இருந்தும் இவருக்கு உலகம் முழுவதும் இருந்து பெரும் அளவில் ஆதரவு குவிந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடிகை ரஞ்சிதாவுடன் இவர் இணைந்திருந்த காட்சிகள் டி.வி.,யில் ஒளிபரப்பான விஷயம் நாடு முழுவதும் உள்ள இவர்களது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் எங்கே இருக்கிறார் என இரு மாநில போலீசார் இவரை தேடி வரும் வேளையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பது மேலும் நித்தியானந்தரின் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பக்க பலமாக இ. மெயில்கள் குவிகிறது: இந்த வீடியோவில் நித்தியானந்தர் பேசியிருப்பதாவது: நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை.என ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன். நானோ எனது தியான பீடமோ எவ்வித தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. என்பதை ஆழமாக சொல்ல விரும்புகிறேன். எனது சோதனையான இந்த காலக்கட்டத்தில் எனது சிஷ்யர்கள், எனது நல விரும்பிகள் எனக்கு உலகம் முழுவதும் பக்கப்பலமாக இருந்து வருகின்றனர். இக்கட்டான காலத்தில் வெளிநாடுகளில் இருந்து எனக்கு இ மெயில் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனர். பலர் கடிதங்களை குவித்துள்ளனர். இவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நல் வித்துக்களை பரப்பியவன்: நான் கடந்த பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் நல் வித்துக்களை பரப்பியுள்ளேன். இதன் காரணமாக எனக்கு இந்த ஆதரவு இருக்கிறது. ஆணித்தரமாக சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். வதந்திகளையும், செய்திகளையும் அறிவீர்கள். நாங்கள் இது தொடர்பான செய்திகளையும், உண்மைகளையும் திரட்டி வருகி‌றேன். எல்லாவற்றையும் திரட்டி எல்லா உண்மைகளையும் நான் உங்கள் முன்பு திறந்து வைக்கிறேன். எல்லோரும் பொறுமையாக இருங்கள் , யாரும் தவறான முடிவுக்கு வர வேண்டாம். நான் சட்ட ரீதியான எவ்வித தவறும் செய்யவில்லை. எனக்கு ஆதரவாக இருந்து வரும் அனைவருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோ சி.டி.,க்கள் தியான பீடத்தின் மூலமாக பல செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது மடத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும் இந்த வீடியோ அப் செய்யப்பட்டுள்ளது.

தன்னிலை விளக்க கடிதம்: மேலும் நி்த்தியானந்தரினன்அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ( அந்த ) வீடியோ தொடர்பாக ஒரு விளக்க கடிதமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் ; களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, தொலைக்காட்சிகளில் சி்த்தரிக்கப்பட்டுள்ளது. பாதககத்தை ஏற்படுத்தும் கிராபிக்ஸ் அதி நவீன நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. என்றும் கூறப்பட்டுள்ளது.விரைவில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நித்தியானந்தர் உலக அளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வாழ்வில் ஆழமான முன்னேற்றங்களை தந்தவர். இவரது கருணையை புரிந்தவர்களுக்கு மேலும் விளக்வுரை தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

வீடியோ வாக்குமூலம்

நன்றி தினமலர் !



நித்யானந்ததுடன் பிரபல பாலிவுட் நடிகை வீடியோ காட்சி !!!

, , 1 Comments »
கடவுள் இருக்கிறார் என்பது நித்யானந்தம் விஷயத்தில் உண்மையாகியுள்ளது ஆம் நித்யானந்தம் செய்த அத்தனை புகழையும் ஒரே நாளில் இது தான் டா கடவுள் ஆடும் வரை ஆட விட்டு பின் அடிப்பார் ஒரே அடி ஆனால் அந்த அடியிலிருந்து நீ எழுந்து வர முடியாது என்பது நித்யானந்தம் விஷயத்தில் உண்மை.


தமிழ் திரைப்பட நடிகை ரஞ்சிதாவும் அவரும் செய்த லீலைகளை வெட்ட வெளிச்சமாக்கியபோது இந்த நடிகை மட்டுமல்ல இன்னும் பல நடிகைகளுடன் நித்யானந்தத்துக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

முன்னால் நடிகை மார்க்கெட் வீழ்ந்ததும் சுவாமியை பார்க்க வந்திருக்கிறார் அவர் தான் பல துனை நடிகைகளையும் அழைத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. அவர் இப்போது வரை ஆசிரமத்துக்கு வந்திருக்கிறார். தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்கும் சில புது நாடக நடிகைகள் பலருடன் நித்யாவுக்கு தொடர்பு இருந்திருக்கிறது இதற்கிடையே அரசியல் பிரச்சினையால் தான் நித்யா கையும் களவுமாக மாட்டிக் கொண்டார் என்று பேசப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் நடிகை மட்டுமல்ல ஒரு பிரபல பாலிவுட் நடிகையும் ரஞ்சிதாவைவிட நெருக்கமாக இருந்திருக்கிறார். இவரின் வீடியோவும் தற்போது இண்டெர்நெட்டில் வெளியிட இருப்பதாக தகவல். இப்படியே சென்றால் சினி பீல்டையே நித்யா ஒரு கலக்கு கலக்குவார் போல தெரிகிறது.
thanks tamiljournal

.ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் !!!

, , 0 Comments »
நித்யானந்தா செக்ஸ் விவகாரத்தில் அடிபட்டு திடீரென்று நடிகை ரஞ்சிதா காணாமல் போனதில், ஏக அப்செட்டில் இருக்கிறார் மணிரத்னம். காரணம் விரைவில் வெளியாக உள்ள அவரது ராவணன் படத்தில் ரஞ்சிதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இன்னும் சில காட்சிகள் பாக்கியிருக்கும் நிலையில் ரஞ்சிதா தலைமறைவாகிவிட்டதால்,

ஏற்கெனவே பல சோதனைகளைச் சந்தித்த மணிரத்னம் டென்ஷனின் உச்சத்துக்கே போய் விட்டாராம். ரஞ்சிதா 1992ல் பாரதிராஜா இயக்கிய நாடோடி தென்றல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விஜயகாந்துடன் பெரிய மருது, அர்ஜுனுடன் கர்ணா, ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். ரஞ்சிதாவின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. எனவே தந்தையைப் போலவே ராணுவத்தில் பணியாற்றும் ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.
கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திய அவர் சமீபத்தில் அவரைப் பிரிந்து தனியாக சென்னையில் வசித்தார். இங்கு அவருக்கு 3 வீடுகள் உள்ளனவாம். இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு, ஹபிபுல்லா சாலை வீட்டில் வசித்தார் ரஞ்சிதா. திருமணத்துக்குப் பின் மீண்டும் சில படங்கலில் நடித்தார். சினிமாவில் அவரை அறிமுகப்படுத்திய பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு டி.வி. தொடரிலும் நடித்தார். மணிரத்னம் இயக்கும் ராவணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கணவருடன் மோதல் என்றும் பணக்கஷ்டத்தில் இருக்கிறார் என்றும் அதனால்தான் நடிக்க வந்துள்ளார் என்றும் அவரைப்பற்றி செய்திகள் வெளியான போது, அவற்றை ஒரேடியாக மறுத்த ரஞ்சிதா, “எனது கணவருடன் சண்டையும் இல்லை. எனக்கு பணக் கஷ்டமும் இல்லை. கணவர் சம்மதத்தோடுதான் நடிக்க வந்தேன். வில்லி வேடங்களில் கூட நடிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார். இந்நிலையில்தான் சுவாமி நித்தியானந்தாவுடன் இணைத்து பரபரப்பான படங்கள் வெளிவந்துள்ளன. இந்தக் காட்சிகளால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இந்த சம்மரில் ராவணாவை வெளியிடும் நோக்கத்தில் பரபரப்பாக இயங்கிவரும் மணிரத்னம் ராவணா பட விஷயமாக ரஞ்சிதாவைத் தொடர்பு கொள்ள முடியாததால் டென்ஷனில் இருக்கிறார். ரஞ்சிதா விவகாரம் படத்தை பாதித்துவிடுமோ என்றும் கவலையில் உள்ளார். காரணம் இது மணிரத்னத்தின் சொந்தப்படம். ரஞ்சிதா விவகாரத்தோடு சேர்த்து 14 பெரிய பிரச்சினைகளை ராவணா படம் எதிர்கொண்டுள்ளதாம்.





கல்வி சேவைக்கு காலணி துடைக்கும் சமூக சேவகர் !!!

, , 0 Comments »
ஏழை மாணவர்களின் கல்வி சேவைக்காக காலணி துடைக்கும் சமூக சேவகரை பேரூராட்சி தலைவர், டி.எஸ்.பி., ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர். சென்னை பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். பட்டதாரியான இவர், இதே பகுதியில் அன்னை தெரசா மழலை பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வி சேவையை வழங்கவேண்டும் என்ற உயரிய நோக்குடன் இக்கல்வி மையத்தை நடத்தி வருகிறார்.


இச்சேவையை தொடர்ந்து சிறப்பாக வழங்கவும், சிறந்த கல்வி நிலையத்தை உருவாக்குவதற்காகவும் தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் பொதுமக்களின் காலணிகளை சுத்தம் செய்து வருகிறார். இதன் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் நிதியை கொண்டு, இக்கல்வி நிலையத்தை நடத்தி வருகிறார். இவரது சேவையை கண்டு பொதுமக்கள் தங்களால் இயன்ற பண உதவியை அளித்து வருகின்றனர். பொதுமக்களிடமிருந்து இலவசமாக பணம் வாங்குவதை தவிர்க்க தன்னுடைய உடல் உழைப்பால் அவர்களது காலணிகளை சுத்தம் செய்து, அவர்களிடமிருந்து நிதி பெறுகிறார்.

கடந்த 2001ம் ஆண்டு முதன் முதலில் ஆதரவற்றோர்களுக்கும், உடல் இயலாதவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்வதற்காக பொதுமக்களின் காலணியை சுத்தம் செய்யும் சேவையை துவங்கிய செல்வகுமார், நாளடைவில் சிறந்த கல்வி சேவைக்காக இப்பணியை மேற்கொண்டு வருகிறார். இவரது கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்கள் வெறும் கல்வி கற்பதோடு நின்றுவிடாமல், அவர்களை பொது அறிவிலும் சிறந்தவர்களாக ஆக்க நாள்தோறும் அரும்பாடு பட்டு வருகிறார். இக்கல்வி சேவையை இலவசமாக வழங்க தேவையான பண உதவிக்காக இவர் வாரத்தின் ஐந்து நாட்கள் பள்ளியிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலணிகளை சுத்தம் செய்யும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். இதுவரை தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் இச்சேவையை செய்து நிதி வசூல் செய்துள்ளார்.

இச்சேவையை கடந்த எட்டு ஆண்டுகளாக சிறப்பாக செய்து, நேற்று ஒன்பதாவது ஆண்டை பொன்னேரி புதிய பஸ் நிலையத்தில் துவக்கினார். பொன்னேரி பேரூராட்சி தலைவர் பத்மாவதி, குத்துவிளக்கேற்றி இச்சேவையை துவக்கி வைத்தார். பொன்னேரி டி.எஸ்.பி., ரங்கராஜன், இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி கவுரவித்தனர். நேற்று காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை பொதுமக்களின் காலணிகளை சுத்தம் செய்து, 2,700 ரூபாய் நிதி வசூல் செய்தார். இவரது சேவையை பாராட்டி, பொதுமக்கள் தங்களால் இயன்ற பண உதவியை செய்தனர்.


THANKS DINAMALAR
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ....

நித்யானந்தாவின் லீலைகள் நடிகைகள் பட்டியல் நீள்கிறது !!

, , 1 Comments »
பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொதிப்படைந்த பக்தர்கள், பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல இடங்களில் நித்யானந்தரின் உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர்.
திடீரென நித்யானந்தா தலைமறைவானது பரபரப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நித்யானந்தாவின் ஆசிரமங்களுக்கு பல நடிகைகள் வந்து சென்றுள்ளனர். பழம் பெரும் கதாநாயகியின் சகோதரி, அவரது மகள் ஆகியோரும் நடிகைகள். சகோதரி மகள் நடிகைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் நித்யானந்தாவை சந்தித்துள்ளார். அப்போது அவருடன் நடிகைக்கு தொடர்பு ஏற்பட்டது. நித்யானந்தாவுக்கு நடிகைகளுடன் தொடர்பு ஏற்பட இவர் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. ஆசிரமத்துடன் தொடர்புடைய நடிகைகளின் பட்டியலில் சினிமாவிலிருந்து தற்போது ஒதுங்கியிருக்கும் நடிகைகள், நடித்து வருபவர்கள், திருமணமானவர்கள் என பலர் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவருமே நித்யானந்தாவுடன் நெருங்கி பழகியுள்ளனர். ஹீரோயினாக நடித்து பிறகு சீரியலில் நடித்தும், அங்கிருந்தும் காணாமல் போன யுவ நடிகை, சின்னப்பூவாய் மெல்லப்பேசும் நடிகை என பலருக்கு நித்யானந்தா ஆசிரமத்துடன் தொடர்பு உள்ளது. விஷயம் வெளியானதால் அந்த நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.


நிர்மலமான நடிகை


நித்யானந்தாவிடம் பல சினிமா நடிகைகள் தொடர்பு வைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் நடிகை ராகசுதா. இவர், தமிழில், ராமராஜன் ஜோடியாக ‘தங்கத்தின் தங்கம்’, நெப்போலியன் நடித்த ‘தமிழச்சி’, ‘தம்பி’, ‘அம்முவாகிய நான்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கை மகளான இவர், யோகா வகுப்புகளுக்கு சென்று வந்தார். சென்னையில் நித்யானந்தா நடத்திய யோகா வகுப்புக்கு சென்று வந்த அவர், நித்யானந்தாவை பார்த்த உடனேயே அவர் காலில் விழுந்து வணங்கினாராம். அதிலிருந்து, அவருடைய ஆசிமரத்தில் சேர்ந்து சன்னியாசி ஆனார். மைசூரிலுள்ள இவரது ஆசிரமத்தில், சுவாமி நிர்மலானந்தா என்ற பெயரில் சில வருடங்களாக யோகா கற்றுக்கொடுத்து வருகிறார் ராகசுதா. இவர்தான் சாமியாருக்கு பல நடிகைகளை அறிமுகப்படுத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் பல முன்னாள் நடிகைகள் மற்றும் டிவி நடிகைகளும் அடங்குவர் என்றும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மோசடி புகார்கள் குவிகின்றன
ஆசிரமம் அமைந்துள்ள இடத்திற்கு வந்திருந்த அதே ஏரியாவைச் சேர்ந்த பாபு என்பவர் கூறும்போது, “நித்தியானந்தா பீடம் 2003ம் ஆண்¢டு வாக்கில் அமைக்கப்பட்டது. இதற்காக இப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் மிரட்டி, நிலங்கள் குறைந்த விலையில் வாங்கப்பட்டன. சில பகுதிகளில் அடுத்தவர் நிலங்களையும் ஆக்கிரமித்தனர்’’ என்றார்.

சந்தனக்கட்டை மீட்பு: நித்யானந்தாவின் ஆசிரமத்தில் நேற்று மதியம் வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். டி.சி.எப். ஆசிரமத்தில் சுமார் 60 முதல் 80 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாமியார் புலித்தோல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்தும் வனத்துறை விசாரணை செய்து வருகிறது.


80 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆசிரமத்தின் உள்ளே 8 முதல் 10 கட்டிடங்கள் உள்ளன. சில கட்டிடங்கள் வெளிநாட்டு பக்தர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர தியானம் செய்வதற்கு குடிசை வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 3 குடிசைகள் நேற்று தீவைத்து கொளுத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் அதை கொளுத்தினார்களா? அல்லது ரகசிய ஆவணங்களை அழிக்கும் முயற்சியா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.



நித்யானந்தா தலைமறைவு!

கொதிப்படைந்த பக்தர்கள், பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல இடங்களில் நித்யானந்தரின் உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர். திடீரென நித்யானந்தா தலைமறைவானது பரபரப்பை அதிகரித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் நித்யானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் நடத்தி வருபவர் பரமஹம்ச நித்யானந்தா (31). தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை உள்பட பல நகரங்களிலும் இவரது ஆசிரமங்கள் உள்ளன. உலகின் பல நகரங்களுக்கும் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். இந்நிலையில், பிரபல நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் படுக்கை அறை வீடியோ காட்சிகள் நேற்று வெளியாயின. இது பெரும் பரபரப்பையும் பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை பொதுமக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் நேற்று இரவு முற்றுகையிட்டனர். ஆசிரமத்துக்கு உடனே சீல் வைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பதற்றம் அதிகரித்ததால், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சிவபாபு கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தில் தங்கியிருந்த 45 ஊழியர்கள் நேற்று நள்ளிரவு நித்யானந்தாவின் பேனர்கள், போஸ்டர்களை ஆவேசமாக கிழித்து எறிந்துவிட்டு வெளியேறினர். ஆசிரமத்தை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊரான தி.மலையில் ஆசிரமம் அமைக்க நித்யானந்தா ஆசைப்பட்டார். இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பவழக்குன்று மலையை ஆக்கிரமிக்க முயன்றுள்ளார். அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதையில் உள்ள நிருதிலிங்கம் அருகே 3 ஏக்கர் பரப்பில் ஆசிரமம் அமைத்தார். அங்கு அவர் தங்க சொகுசு அறையுடன் கட்டிடம் கட்டப்பட்டது. திருவண்ணாமலைக்கு வரும்போது அங்குதான் தங்குவார். கடந்த ஜனவரி 8&ம் தேதி பிறந்தநாள் விழாவை இங்கு விமரிசையாக கொண்டாடியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மலை மாவட்ட இந்து முன்னணி தலைவர் டி.எஸ்.சங்கர் கூறுகையில், ‘‘ஆடம்பர வாழ்க்கை வாழும் நித்யானந்தர் கிரிவலப்பாதையில் ஆசிரமம் கட்டக் கூடாது என்று ஏற்கனவே கூறினோம். அவரது சுயரூபம் தற்போது அம்பலமாகியுள்ளது. அவரை உடனே கைது செய்ய வேண்டும். தி.மலைக்குள் அவரை இனி விடமாட்டோம்’’ என்றார். புதுச்சேரி வில்லியனூர் ஏம்பலத்தில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்தை பொதுமக்கள் சூறையாடினர். ஜன்னல்கள், விளக்குகள், மின்விசிறிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சாமியார் பேனரை தீவைத்து கொளுத்தி செருப்பால் அடித்தனர். பதற்றம் அதிகரித்ததால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இந்து முன்னணி அமைப்பினர் மாநில பொதுச்செயலாளர் முருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நித்யானந்தாவை கைது செய்து சொத்துக்களை முடக்க வேண்டும் என்று மக்கள் கோஷம் எழுப்பினர்.

கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் பேனர்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கடலூர் மோகினிபாலம் பகுதியில் ஆசிரமத்தின் பெயர்பலகையை பொதுமக்கள் தார்பூசி அழித்தனர். நெல்லை டவுனில் உள்ள நித்யானந்தர் தியான மையத்தில் நித்யானந்தா படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர், போஸ்டர்களை நிர்வாகிகளே கிழித்து எறிந்தனர். இந்த மையத்தில் சில மாதம் முன்பு அவர் ஆன்மீக உரையாற்றியுள்ளார். சீர்காழி சட்டநாதபுரம் மனோன்மணியம் நகரில் நித்யானந்த பீடத்தை அவர் சமீபத்தில் திறந்துவைத்தார். இங்கு தினமும் பஜனை, தியானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. டிவியில் ஆபாச காட்சிகளை பார்த்த மக்கள் ஆவேசமடைந்து நித்யானந்தா படங்கள், பேனர்களை நேற்று இரவு தீ வைத்து கொளுத்தினர்.

சென்னையில் 15க்கும் அதிகமான இடங்களில் அவரது சீடர்கள் ஆசிரம கிளை வைத்து தியான வகுப்புகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தி வந்துள்ளனர். நேற்று இரவோடு இரவாக அனைத்து இடங்களில் இருந்த போர்டுகள், பேனர்கள் அகற்றப்பட்டன. பல இடங்களில் ஆசிரம கிளைகள் பூட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், செக்ஸ் லீலை காட்சிகள் வெளியானதை தொடர்ந்து, நித்யானந்தா திடீரென தலைமறைவாகிவிட்டார். ஆசிரம நிர்வாகிகள் செல்போனில் அவரை தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை.

நித்தியானந்தா தலைமறைவாகிவிட்டார்:கமிஷ்னர்!

பரமஹம்ச நித்தியானந்தா சாமியார் பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாச லீலைகளில் ஈடுபட்டிருக்கும் வீடியோ வெளியானது. இதையடுத்து நாடெங்கிலும் நித்தியானந்தாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நேற்று சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ராம.சிவசங்கர், சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தார். மேலும் பல வழக்கறிஞர்களூம் புகார் கொடுத்தனர். இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர், ’’வழகறிஞர்களின் புகாரை ஏற்று நித்தியானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’என்று தெரிவித்தார். நித்தியானந்தா தலைமறைவாகிவிட்டார் என்பது உண்மை’’என்றும் தெரிவித்தார்.


THANKS VICETAMIL

பரபரப்பு மீண்டும் விமானம் மோதியது !!!

, , , 4 Comments »
ஐதராபாத்தில் நேற்று நடந்த கடற்படை சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற விமானம் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து அடுக்குமாடி குடியிருப்பு மீது மோதி நொறுங்கியது. இதில், 2 விமானிகள் பலியானார்கள். மேலும் அந்த கட்டிடத்தில் இருந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த கட்டிடம் பலத்த சேதம் அடைந்தது.

ஐதராபாத் பேகம்பெட் பழைய விமான நிலையத்தில் இந்திய விமான கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல், ஆந்திர முதல்வர் ரோசய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடக்க விழாவின் ஒரு பகுதியாக கடற்படையினரின் விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. அதில் கடற்படையின் சாகர் பவன் குழுவினர் சாகசம் செய்தனர்.


வானில் பறந்த 4 கிரண் ரக விமானங்கள் குட்டிகரணம் அடித்து சாகசம் செய்தன. அப்போது, அதில் ஒரு விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கீழே பாய்ந்தது. சாகச நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.


விமானத்தை கட்டுப்படுத்த விமானியும், துணை விமானியும் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. விமான நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள புது பவன்பள்ளி பகுதியில் இருக்கும் 3 மாடி குடியிருப்பின் 3வது மாடியில் இருந்த வீடு மீது அந்த விமானம் பயங்கர சத்தத்துடன் மோதி நொறுங்கியது. இதில் கட்டிடத்தில் கூரையில் இருந்த செல்போன் டவர் மற்றும் 3வது, 2வது மாடி இடிந்தன.


மோதிய வேகத்தில் விமானத்திலும், கட்டிடத்திலும் தீ பிடித்தது. அந்த கட்டிடத்தில் இருந்த கிளம்பிய கரும்புகை பல கி.மீ. தூரத்துக்கு தெரிந்தது. விமானம் மோதிய சிறிது நேரத்தில் தீயணைப்பு படையினர் அந்த இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர்.


அதே நேரத்தில் கட்டிடத்தில் இருந்தவர்களை மீட்கும் பணியும் தொடங்கியது. இடிபாடுகளில் சிக்கியும், தீக்காயம் அடைந்தும் தவித்துக் கொண்டிருந்த 7 பேரை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர். விமானி மவுரியா, துணை விமானி ராகுல் நாயர் ஆகியோரின் சடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன. விமானத்தின் சிறகு உடைந்து விழுந்ததில் ரோட்டில் நின்றிருந்த மாருதி வேன் நொறுங்கியது.


இது குறித்து விமானப்படை தலைமை தளபதி நிர்மல் வர்மா கூறுகையில்,ÔÔவிபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமானிகள் பாராசூட் உதவியுடன் குதித்து தப்பி இருக்கலாம். ஆனால், பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படாமல் விமானத்தை தரைஇறக்க முயன்றதால் பாராசூட் உதவியுடன் குதிக்க அவர்களுக்கு கால அவகாசம் இல்லாமல் போய் இருக்கலாம்ÕÕ என்றார். இந்த விபத்தை தொடர்ந்து கிரண் ரக விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
 
THANKS DINAKARAN
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ....

நடிகை ரஞ்சிதாவுடன் காம லீலைகள் நாடு முழுவதும் பக்தர்கள் கொதிப்பு !!!

, 8 Comments »
சுவாமி நித்யானந்தாவின் காம லீலைகள் :  சல்லாபம்


சென்னை: பத்திரிகை அலுவலகத்துக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் வரும். ஃபேக்ஸ், இமெயில் வந்த பிறகு கடிதங்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. பதிலுக்கு வீடியோ, ஆடியோ சி.டி., டி.வி.டி.க்கள் நிறைய வருகின்றன. சிலவற்றில் சுவையான தகவல்கள், படங்கள் கிடைக்கும். சில குழப்பமான தகவல்களை தாங்கி வந்திருக்கும். நேற்று வந்திருந்த ஒரு சி.டி.யை கம்ப்யூட்டரில் செருகியபோது பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.


சுவாமி பரமஹம்ச நித்யானந்தா என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாக திகழும் ஒரு ஆன்மிக தலைவர், நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக சல்லாபிக்கும் காட்சிகள் வரிசையாக கம்ப்யூட்டர் திரையில் விரிந்தன. செல்வாக்கு மிகுந்த ஒரு ஆன்மிக தலைவர் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், அவருக்கு வேண்டாத யாரோ செய்த ஒட்டுவேலையாக இருக்குமோ என்றுதான் முதலில் சந்தேகம் எழுந்தது. எனவே கம்ப்யூட்டர் மற்றும் வீடியோ தொழில்நுட்பத்தில் அனுபவம் மிகுந்த நிபுணர்களிடம் சிடியை சோதனை செய்ய கொடுத்தோம். ஒட்டுவேலை அல்ல, அசல் காட்சிகளே சிடியில் பதிவாகியுள்ளது என அவர்கள் அனைவரும் ஊர்ஜிதம் செய்த பிறகே இந்த நம்பிக்கை மோசடியை அம்பலப்படுத்த தினகரன் தீர்மானித்தது.


நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் சாமியார் ஏற்படுத்தியுள்ள ஆசிரம கட்டமைப்பின் தலைமையகம் பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் அமைந்துள்ளது. இதன் கிளைகள் இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. 33 நாடுகளில் 1200 மையங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது.


நித்யானந்த சுவாமி தமிழகத்திலும் பிரபலமானவர். தமிழகத்தின் திருவண்ணாமலைதான் அவர் பிறந்த ஊர். பிறந்த பத்தாவது நாளில் அவருக்கு ஜாதகம் கணிக்க அழைக்கப்பட்ட ஜோதிடர், குழந்தையின் கிரகசாரங்களை பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாக திகழ்வார் என்று கூறினாராம். 1978ம் ஆண்டு பிறந்த நித்யானந்தாவின் ஒரிஜினல் பெயர் ராஜசேகரன். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீக குருவாக கொண்டு வளர்ந்த ராஜசேகரன் 12 வயதிலேயே குண்டலினி சக்தியை எழுப்பும் ஆற்றல் பெற்றதாக அவரது வாழ்க்கை வரலாறு சொல்கிறது. இமயமலையில் உள்ள ஒரு பெரிய சாமியார் அவருக்கு பரமஹம்ச நித்யானந்தா என பெயரிட்டதாக தியானபீடத்தின் வெப்சைட் கூறுகிறது.


பெயர் மாற்றத்துக்கு பின்னர் ஈரோட்டில் காவிரி நதிக்கரையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்த அவர், அங்கிருந்து பெங்களூர் சென்று ஆசிரமம் நிறுவினார். பிரம்மச்சரிய விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு போதித்து வரும் நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவம் நடந்த இடம் வீடா அல்லது ஆசிரமத்தின் ஓர் அறையா என்பது தெரியவில்லை. நடிகை ரஞ்சிதாவுடன் சாமியாரும் படுசகஜமாக பேசிக் கொண்டு உல்லாசத்தில் ஈடுபடுவதை பார்க்கும்போது இது நீண்டகால பழக்கம் என்று தெரிகிறது. ஒருநாள் புடவையில் வரும் நடிகை ரஞ்சிதா அடுத்தநாள் சுடிதாரில் வருகிறார். கட்டிலில் சாமியாரும் அவரும் நெருக்கமாக இருக்கிறார்கள். நடிகை ரஞ்சிதாவிடம் கேட்டு ஏதோ மாத்திரை வாங்கி சாப்பிடும் சாமியார் பின்னர் ஐஸ்கிரீம் சுவைக்கிறார். உற்சாகமாக ஏதோ பேசிக் கொண்டு நடிகையை தழுவிக் கொள்கிறார். சி.டி.யில் பதிவாகியுள்ள சில காட்சிகள் ஆபாசத்தின் உச்சமாக தோன்றுகிறது. அவற்றை ஒதுக்கிவிட்டு சில படங்கள் மட்டும் இங்கு பிரசுரிக்கப்படுகின்றன.
ஒரு சிலரின் இத்தகைய காமக் களியாட்டங்களால் உண்மையான பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டுள்ள நேர்மையான சாமியார்களின் பெயரும் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டமானது.


புனிதமான காவி உடை தரித்து நாட்டு மக்களுக்கு அருளாசி வழங்கியும் பத்திரிகைகளில் தொடர் எழுதியும் நல்வழி போதிக்கும் சாமியாரின் சல்லாப லீலைகள், இத்தனை காலமாக அவரை நம்பிய பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ காட்சி


 




நன்றி தினகரன் !

பறவைகளைப்போல் வானில் பறந்த அதிசய மனிதர்கள் !!!

, , , , 0 Comments »
நண்பர்களே இதற்கான பதிவை வாசிக்க இங்கு சொடக்கவும் . >>>>









இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ....

ஒரு தவறுக்கு ஒரு ரூபாய் !!!

, , 0 Comments »
நண்பர்களே இதற்கான பதிவை வாசிக்க இங்கு சொடக்கவும் . >>>>



இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ....

நான் ரசித்த உண்டியல் பணம் !!!

, , 0 Comments »
நண்பர்களே இதற்கான பதிவை வாசிக்க இங்கு சொடக்கவும் . >>>>



இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ....